இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

22. இருட்டு நேரத்தில சாப்பிடலாமா?


இருட்டுக்குள்ள எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது. குறிப்பா சாப்பிடக் கூடாது. அப்படி இருட்டுக்குள்ளாறச் சாப்புட்டா பேயி வந்து நம்ம கூட ஒக்காந்துக்கிட்டுச் சாப்புடும்னு சொல்லுவாங்க. இருட்டு நேரந்தான் பேயிகளுக்கு ரொம்ப உகந்த நேரம். இருட்டுக்குள்ளாற பேயிகளுக்குச் சக்தி அதிகம். அதுகள ஒண்ணும் செய்ய முடியாதுன்னும் சொல்வாங்க. இதப்பத்தி இந்தப் பக்கம் ஒரு கதை வழக்கத்துல வழங்கி வருது.

ஒரு ஊருல அக்கா தங்கச்சி ரெண்டு பேரு இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரு மேல ஒருத்தரு ரெம்பப் பாசமா இருந்தாங்க. தங்கச்சிக்கு ஒண்ணுன்னா அக்காகாரி ஓடுவா. அக்காவுக்கு ஒண்ணுன்னா தங்கச்சிகாரி ஓடுவா. அக்கா தங்கச்சி ரெண்டுபேரும் ஒரே ஊருக்குள்ளாற வாக்கப்பட்டிருந்தாங்க. வெவ்வேற வீட்டுல வாக்கப்பட்டிருந்தாலும் ஒருத்தர ஒருத்தர் விட்டுக்கொடுக்காம இருந்தாங்க.

தங்கச்சிகாரி நல்லா ஒழைச்சா. அவ வீடு வளமையா இருந்துச்சு. வீடு வாச, நெலம் நீச்சுன்னு குடும்பத்த ஒழைச்சு முன்னேத்துனா. ஆனா அக்காகாரி வறுமையிலேயே இருந்தா. அவ வாக்கப்பட்டுப் போனப்ப அந்தக் குடும்பம் கொஞ்சம் வளமையாத்தான் இருந்துச்சு. ஆனா இவ போன கொஞ்ச நாள்ல அந்தக் குடும்பம் வளமை மாறி வறுமைக்கு வந்துருச்சு.

அக்காகாரியும் கடுமையா ஒழைச்சா. ஆனா அவ வறுமையத் தவிர ஒண்ணையும் காண முடியல. இத நெனச்சி நெனச்சி அக்காகாரியும் அவ வீட்டுக்காரனும் ரொம்ப வருத்தப்பட்டாங்க. தங்கச்சிகாரி அப்பப்ப வந்து அவங்களுக்கு வேண்டிய ஒதவிகளச் செஞ்சிட்டு ஆறுதல் கூறிட்டுப் போவா. அக்காகாரி எல்லாம் தன்னோட தலைவிதின்னு நெனச்சிக்கிட்டு இருப்பா.

அவ வேலை செஞ்சிட்டு வந்து கெடைச்ச நெல்ல வச்சிக் குத்திச் சோறாக்குவா. நெறைய அரிசி போட்டுச் சோறு வடிச்சாலும் எல்லாருக்கும் அது காணாது. வீட்டுல உள்ள எல்லாரும் அரைகுறையாவே சாப்புடுவாங்க. சோறும் மிஞ்சாது. இது எதுனாலன்னும் அக்காகாரியாலயோ அவ வீட்டுக்காரனலாயோ கண்டுபிடிக்க முடியல. அன்னாடு வேலை பாத்துக் கஞ்சிகுடிக்கிற நெலமையிலதான் அக்காகாரி இருந்தா. இருந்தாலும் எப்படியாவது நாமளும் முன்னேறணும்னு நெனச்சிக்கிட்டு கடுமையா வறுமைய எதுத்துப் போராடுனா. இருந்தாலும் அவளோட விதி அவளக் கீழ தள்ளிக்கிட்டே இருந்துச்சு.

இப்படி இருக்கறபோது ஒருநாளு அக்காகாரி நெல்லக் குத்தி சோறாக்கிச் சாப்புடுற நேரத்துல அவளோட தங்கச்சிகாரி வந்தா. அக்காகாரி தங்கச்சிகாரிய வான்னு கூப்புட்டு கும்பாவுல அவளுக்கும் கொஞ்சம் சோத்தப்போட்டுக் குடுத்துச் சாப்புடச் சொன்னா.

அவளும் சாப்புட்டாக. இருட்டான நேரம். அக்காகாரிக்கிட்ட தங்கச்சிபாத்து, ‘‘ஏக்கா ஏன் விளக்குப் பொருதாமச் சாப்புடரீங்க’’ அப்படீன்னு கேட்டா. அதுக்கு அக்காகாரி, ‘‘அதையேன்டி கேக்குற. வௌக்கேத்துறதுக்குக் கொஞ்சங்கூட எண்ணையே இல்ல. அதுமட்டுமில்லாம எண்ண வாங்குறதுக்கும் காசில்ல. நானு வயத்துப்பாட்டப் பாப்பனா. வௌக்குக்கு எண்ண வாங்கி ஊத்துவேனா’’ன்னு சொன்னா. தங்கச்சிகாரி எதுவும் சொல்லாம சாப்புட்டுட்டுப் போயிட்டா.

அக்காகாரி புள்ளகளுக்கும் அவளோட வீட்டுக்காரனுக்கும் சோத்தப்போட்டுக் கொளம்ப ஊத்திக் கொடுத்தா. அவங்களும் சாப்புட்டாங்க. அவளும் சோத்தப் போட்டுக்கிட்டு இருட்டுக்குள்ளாறச் சாப்புட்ட. அவளுக்குப் பசி ரொம்ப இருந்துச்சு. சோத்தப் போட்டுட்டுத் தண்ணிய எடுத்துக்கிட்டு வரலாம்னு அவ போனா. அப்போதைக்குக் கருப்பா ஒரு பேயி இருட்டுக்குள்ளாற வந்து இருந்துக்கிட்டு அவ சோத்துத் தட்டுல இருந்த சாப்பாட்டச் சாப்புட்டுருச்சு.

தண்ணிய மோந்துக்கிட்டு வந்த அக்காகாரி தட்ட எடுத்துச் சாப்புடலாம்னு போனா ஆனா தட்டுக் காலியா இருந்ததப் பாத்துட்டு, ‘‘அடடா நாமதான் சாப்புட்டதை மறந்துட்டு தண்ணி மோக்கப் போயிட்டோம்னு’’ நெனச்சிக்கிட்டு மறுபடியும் சோத்தப்போட்டுச் சாப்புட ஆரம்பிச்சா.

அப்ப அந்தப் பேயி அவ ஒரு கையி சோத்த எடுக்கறபோது பேயியும் ஒருகையி சோத்த அள்ளிச் சாப்புடுச்சு. இப்படி அக்காகாரியும் பேயும் மாறிமாறிச் சாப்புட்டாங்க. இப்படி ரெம்ப நாளு அந்தப் பேயி சாப்புட்டுக்கிட்டு இருந்துச்சு.

அப்புறமா அந்தப் பேயி தான் இந்த வீட்டுல ரொம்பச் சௌகரியமா இருந்துக்கலாம்னு நெனச்சித் தன்னோட மனைவி, ரெண்டு புள்ளங்க எல்லாரையும் நெரந்தரமா இந்த வீட்டுக்குக் கூட்டியாந்துருச்சி.

அக்காகாரி இருட்டு நேரத்துல சோத்த ஒவ்வொருத்தருக்கும் போட்டுக் கொடுத்த பெறகு அவங்கள்ளாம் சாப்புடறபோது இந்தப் பேயிகளும் அவங்க அவங்க பக்கத்துல ஒக்காந்துக்கிட்டு நல்லா சாப்புட்டுச்சுக. இதனால அந்தக் குடும்பத்துல இருந்த அத்தனைபேரும் நாளடைவில எலும்புந் தோலுமா ஆயிப்போயிட்டாங்க.

அவங்க நல்லாச் சாப்புட்டும் அவங்களுக்குத் திருப்தி இல்லாம இருந்துச்சு. அவங்க சாப்பாட்ட இந்தப் பேயிக சாப்புட்டதால அவங்க ஒடம்பு வத்தி எலும்பாப் போயிட்டாங்க. அக்காகாரியும் அவளோட குடும்பமும் இப்படி ஆயிப்போயிட்டாங்களேன்னு தங்கச்சிகாரி நெனச்சிக்கிட்டு ரொம்ப வெசனப்பட்டா.



அவளாள சும்மா இருக்க முடியல. அக்காகாரியோட குடும்பம் இப்படி ஆகறதுக்கு எதாவது ஒரு காரணம் இருக்கணும்னு நெனச்சிக்கிட்டு இத எப்படியாவது கண்டுபிடிச்சே ஆகணும்னு மனசுக்குள்ளாற வச்சிக்கிட்டு அக்காகாரி வீட்டுக்குப் போனா.

தங்கச்சிகாரி வந்ததப் பாத்துட்டு அக்காகாரி வாத்தான்னு கூப்புட்டா. அக்காகாரி வீட்டுல ரெண்டு மூணு நாளு தங்கிட்டுப் போறதா தங்கச்சிகாரி சொன்னா. அக்காகாரி சரி இருந்துட்டுப்போ அப்படீன்னு சொல்லி இருக்கற சாப்பாட்ட அவளுக்கும் பங்கிக் கொடுத்தா.

இராத்திரி நேரம் வந்துச்சு. அக்காகாரி இருட்டுக்குள்ளாற சமைச்சி இருட்டுக்குள்ளாறயே வீட்டுல உள்ளவங்களுக்குப் போட்டா. அப்ப தங்கச்சிகாரியும் தட்டுல சோத்த வாங்கிக்கிட்டு சாப்புட ஒக்காந்தா. அவ தட்டுல கைவைக்கறதுக்குள்ளாற அவளோட தட்டுல உள்ள சாப்பாடு காணாமப் போயிருச்சு.

அவளுக்கு ஆச்சரியமாப் போச்சு. இங்க ஏதோ பேயிக இருந்துக்கிட்டு இப்படி இந்தக் குடும்பத்தப் போட்டு ஆட்டிப் படைக்குதுங்க போலருக்குன்னு அக்காகாரியும் அவளோட வீட்டுக்காரங்களும் எலும்புந் தோலுமாப் போனதுக்கு இதுதான் காரணம்னு நெனச்சிக்கிட்டு இதுகல வெரட்டரதுக்குத் திட்டம்போட்டா.

மறுநாளு அவ அக்காகாரி சோத்த வடிச்சி எல்லாரும் சாப்புடறதுக்காக ரெடிபண்ணுனா. தங்கச்சிகாரியும் அக்காகாரிக்கு ஒதவி பண்ணுனா. அதனால சீக்கிரமா இருட்டுறதுக்குள்ளாறயே சமையலை முடிச்சிட்டாங்க. அக்காகாரி சத்த நேரம் ஒக்காந்துட்டு இருட்டுன பின்னால சாப்புடுவோம்னு சொன்னா. ஆனா தங்கச்சிகாரி அக்காகாரியப் பேசாம இருக்கச் சொல்லிப்புட்டு தட்டெல்லாம் கழுவி அன்னைக்குச் சாப்பாட்டத் தட்டுல போட்டு எல்லாரும் சாப்புடுறதுக்குக் கொடுத்தா.

எல்லாரும் நல்லாச் சாப்புட்டாங்க. தங்கச்சிகாரியும் சாப்புட்டுட்டுப் பாத்தா நெறையச் சாப்பாடு மிஞ்சி இருந்துச்சு. அதப்பாத்த அக்காகாரிக்கு ரொம்ப ஆச்சரியம். அட என்னடா நாமளுந்தேன் தெனமும் இதேமாதிரி சோத்த வடிச்சிச் சாப்பிட்டுட்டுப் பாக்குறோம் ஒரு பருக்கக் கூட மிஞ்சிறது இல்ல. இப்ப என்னடான்னா இம்புட்டுச் சாப்பாடு மிஞ்சியிருக்குதேன்னு வாயப்பொளந்தா.

தங்கச்சிகாரி எதுவும் பேசாம நமுட்டுச் சிரிப்புச் சிரிச்சிட்டுப் பேசாமா படுக்கான்னு சொல்லிட்டு எல்லாருஞ் சேந்து படுத்துத் தூங்கினாங்க. அப்போதைக்குச் சாப்பிட எதுவுங் கிடைக்காததால அங்கிருந்த பேயிங்க பசியால பட்டினி கிடந்துச்சுங்க. ஆம்பளப் பேயி தன்னோட பொண்டாட்டியப் பாத்து, ‘‘இந்த தங்கச்சிகாரியாலதான் இன்னைக்கு நாம பட்டினியாக் கிடக்க வேண்டியதாப் போயிருச்சு. நாளைக்கு அக்காகாரி இதுமாதிரி இருட்டுறதுக்கு முன்னால சாப்புட மாட்டா. இருட்டுன பின்னாலதான் சாப்புடுவா. அதனால நாளைக்கு நாம நல்லாச் சாப்புடுவோம்’’னு சொல்லிட்டு சமாதானப்படுத்திச்சு.

மக்காநாளும் அக்காகாரிக்கு ஒதவுனா தங்கச்சிகாரி. ஆனா அன்னைக்கு தன்னோட வீட்டுல இருந்து கொஞ்சம் வௌக்கெரிக்க எண்ணையக் கொண்டுவந்து வச்சி விளக்கேத்தினா. வீடு முழுக்க வெளிச்சமா இருந்துச்சு. இந்த வெளிச்சத்தப் பாத்த பேயிங்க அரண்டுபோயி வெளியில போயி நின்னதுங்க.

எப்படா வௌக்கு அணையும் நாமபோயி வீடடுக்குள்ளாற நொளஞ்சி அவங்க இருட்டுக்குள்ளாற சாப்புடுறபோது சாப்புடலாம்னு காத்துக்கிட்டு இருந்துச்சுங்க. ஆனா வௌக்க நல்லாத் தூண்டிவிட்டு வெளிச்சத்தக் கூட்டி வைச்சிட்டு எல்லாரும் சாப்புட்டாங்க. அன்னைக்கும் எல்லாரும் வகுறாறச் சாப்புட்டாங்க. சோறும் மிச்சப்பட்டது.

அக்காகாரிக்கு ஒண்ணுமே புரியல. அவ தங்கச்சியத் தனியாக் கூப்புட்டு, ‘‘என்னடி இது அநியாயமா இருக்கு. நானுந்தேன் எம்புட்டோ பண்ணிப் பாத்துட்டேன். நீ வந்த ரெண்டு நாளா சோறு இம்புட்டு மிஞ்சுது. என்னதான் மாய மந்திரம் போட்டே’’ அப்படீன்னு கேட்டா.

அதுக்குத் தங்கச்சிகாரி, ‘‘அக்கா நீ சோத்த இருட்டுக்குள்ளறயே வச்சிச் சாப்புட்ட. ஒன்னோட வீட்டுக்காரருக்கும் பிள்ளங்களுக்கும் போட்டுக் குடுத்துச் சாப்புட வச்சே. இதத் தெரிஞ்சிக்கிட்ட பேயிங்களும் இருட்டுக்குள்ளாற வந்து ஒங்க வீட்டுக்குள்ளாறத் தங்கிக்கிட்டு ஒங்க தட்டுல இருக்குற சாப்பாட்ட ஒங்களுக்குத் தெரியாம அள்ளி அள்ளிச் சாப்புட்டுச்சுங்க. அதனால நீங்க எல்லாரும் ஒழுங்காச் சாப்பாடு கெடைக்காம எலும்பும் தோலுமா ஆயிப்போயிட்டீங்க. சாப்பாடும் மிஞ்சல. ஆனா இப்ப வெளிச்சத்துல சாப்புடறதுனால நீங்க நல்லாச் சாப்புடறீங்க. சோறும் மிஞ்சுது. பேயிகளால ஒங்களோட சாப்பாட்டச் சாப்புட முடியல. வெளிச்சத்தக் கண்ட பேயிங்க எல்லா பதறி அடிச்சிக்கிட்டு ஓடிப்போயிட்டதுங்க. இனிமே இருட்டுக்குள்ளாறச் சாப்புடாம வௌக்க ஏத்தி வச்சிக்கிட்டு வெளிச்சத்துல சாப்புடுங்க. எல்லாம் மிஞ்சும். நீங்களும் நல்லாருப்பீங்கன்னு’’ சொன்னா.

இதக்கேட்ட அக்காகாரி, ‘‘அடடா இது தெரியாமப் போச்சே. வௌக்குப் பத்தவச்சா அதுக்கு எண்ணெ செலவாகும்னு நெனச்சுத்தேன் இருட்டுக்குள்ளறயே சாப்பாடு போட்டு நானுஞ் சாப்புட்டேன். இத இந்தப் பேயிக சாதகமா ஆக்கிக்கிட்டு என்னோட ஒழைப்பையெல்லாம் உறிஞ்சி எடுத்துப்புடுச்சுங்க. இனிமே நீ சொன்ன மாதிரியே வௌக்கேத்தி வச்சிக்கிட்டு அந்த வெளிச்சத்துலேயே சாப்புடுறேன். என்னோட குடும்பத்துக்கு நல்ல வழி காமிச்ச நீ நல்லா இருக்கணும்னு’’ வாயாற வாழ்த்துனா.



இதையெல்லாம் ஒண்டிநின்னு கேட்ட ஆம்பளப்பேயி, ‘‘இனிமே இந்த வீட்டுல இருக்க முடியாது. வாங்க வேற இடந்தேடிப் போயிருவோம்னு’’ சொல்லிக்கிட்டே தன்னோட குடும்பத்தக் கூட்டிக்கிட்டு ஓடிருச்சு.

அப்பறம் அந்த அக்காகாரி தங்கச்சி சொன்னது மாதிரி நடந்துக்கிட்டா. அந்த வீட்டுல வளமை வந்து சேந்தது. வறுமை ஓடிப்போயிருச்சு. அதனாலதான் இருட்டுக்குள்ளாறச் சாப்புடக் கூடாதுன்னு சொல்றாங்க. இருட்டுக்குள்ளாறச் சாப்புட்டா பேயிகளும் வந்து நம்மளோட சேந்து சாப்புடும். குடும்பத்துல வறுமை வந்துரும்னு நெனச்சிக்கிட்டு யாரும் இருட்டுக்குள்ளாற சாப்புடமாட்டாங்க. இந்தக் கத இன்னக்கி வரைக்கும் இந்தப் பக்கத்து வழக்கத்துல இருக்குது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1v.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License