........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
தொடர் கட்டுரை-1. பகுதி-1 நல்ல பெயர் வாங்கலாம். -தேனி.எம்.சுப்பிரமணி.
நம்மைத் தேடி வருமா?
ஒன்றும் தெரியாத கூமுட்டைகள் என்று நாம்
நினைத்துக் கொண்டிருக்கும் பலர் எளிதில் நல்ல பெயர் வாங்கிக்கொண்டு
விடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நம்மைக் காட்டிலும் உயர்ந்த நிலையில்
இருக்கிறார்கள். எல்லாம் தெரிந்த நாம் எல்லோரையும் பகைத்துக் கொண்டு ஏமாளி என்று
பெயர் வாங்கியதுதான் மிச்சம் என்று அலுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
“ஏதோ ஒன்றிரண்டு பேர்களிடம் நல்ல பெயரை வாங்கி
விடலாம். எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க முடியுமா? அது எவ்வளவு கஷ்டம்...?”
என்று பயந்து ஒதுங்கத் தேவையில்லை... நல்ல பெயர் வாங்குவது மிகவும் சுலபம்.
அதற்கு காசு பணம் தேவையில்லை. நம்முடைய வாழ்க்கை நடைமுறையில் ஒரு சில மாற்றங்கள்
மட்டும் செய்து கொண்டால் போதும்... நம்மை நல்ல மனுசன்... என்றும் அவரைப் போல
ஒருத்தரைப் பார்க்க முடியுமா? என்றும் எல்லோரையும் சொல்ல வைத்து விடலாம். ****** |
m |
![]() |
m |
1. முதலில் ஆமாம் போடலாம்.
தங்கள் பேச்சுக்கு எல்லோரும் தலையாட்ட வேண்டும்
என்கிற எண்ணம் பலரிடமும் இருக்கிறது. தங்களைப் பற்றி மிகவும் உயர்வாக நினைத்துக்
கொள்ளும் இவர்கள், தாங்கள் சொல்லும் கருத்துக்கள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளக்
கூடியதாக இல்லாவிட்டாலும் அதை எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று
விரும்புவார்கள். இவர்களிடம் நாம் அந்தப் பேச்சில் தவறு தெரிகிறதே என்று குறை
சொல்லி நம்முடைய கருத்துக்களுடன் அவர்களிடம் வாக்குவாதம் செய்து கெட்ட பெயரை
வாங்குவதை விட, “ஆமாம்” என்கிற வார்த்தையை மட்டும் அவர்களுக்கு ஆதரவாகச்
சொல்லிப் பாருங்கள். அவர்கள் உங்கள் பெயரை உச்சிக்கு ஏற்றிவிடுவார்கள். (வழிமுறைகள் வளரும்)
|
முகப்பு |