........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
தொடர் கட்டுரை-2 பகுதி-2
உண்மை -வேந்தன் சரவணன். 2. தொட்டனைத் தூறும் மணற்கேணி
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு - கல்வியின் சிறப்பினைக் கூறும் அற்புதமான குறள் இது. ஆனால் இதன் பொருளைக் கூறுமிடத்து சற்று அவசரப்பட்டு இருக்கிறார்கள். இதன் பொருளாகக் கூறப்படுவதாவது: "தோண்டிய அளவே மணல்கேணியில் நீர் ஊறும். அதுபோல கற்கும் அளவே மாந்தர்க்கு அறிவு ஊறும்." என்பது ஆகும். குறளை மேலோட்டமாகப் பார்த்தால் மேற்கூறிய பொருளே கொள்ளத் தோன்றும். ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே அது தவறு என்று புலப்படும். சரியான பொருள் என்ன என்று காணும் முன்னர் இப்பொருளில் உள்ள தவறு என்ன என்று பார்ப்போம். வள்ளுவர் இக்குறளில் "நீர்" என்ற சொல்லைப் பயன்படுத்தவே இல்லை. அதை நாமாகக் கூட்டிப் பொருள் கொண்டுள்ளோம். வள்ளுவர் கூறவந்த பொருள் இதுதான் என்றால் அவர் "'மணற்கேணி" என்ற சொல்லுக்குப் பதிலாக "'நீர்க்கேணி" என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் அவர் அதை பயன்படுத்தவில்லை. அதுமட்டுமல்ல, மணற்கேணியைத் தோண்டினால் நீர் வரும் என்பது எழுதப்படாத விதியா என்ன?. எல்லா மணற்கேணிகளிலும் தோண்டினால் நீர் வருவதும் இல்லை. எனவே வள்ளுவர் நீர் என்ற பொருளை நேரடியாகக் கூறாமல் உய்த்துணர வைத்திருப்பார் என்று சொல்லவும் முடியாது. ஆக இப்பாடலுக்கும் நீருக்கும் தொடர்பே இல்லை என்பது தெளிவாகிறது. நீருக்குத் தொடர்பில்லை என்றால் "'அறிவு" என்னும் பொருளை வள்ளுவர் எதனுடன் இங்கே ஒப்பிடுகிறர்ர்?. நிச்சயம் மணற்கேணியுடன்தான். ஏனென்றால் அதைத் தவிர இப்பாடலில் வேறொரு பொருள் கூறப்படவில்லை. அதுமட்டுமின்றி, இப்பாடலில் "தூறும்" என்ற சொல் மணற்கேணிக்கும் அறிவுக்கும் ஒப்பீட்டுச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மிக முக்கியமானது. "'நீர்" என்ற பொருளை வலிந்து கொள்வதற்காக "தொட்டனைத் தூறும்" என்ற தொடரை "தொட்டனைத்து ஊறும்" என்று பிரித்துத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். "'தூறும்" என்பது ஒரே சொல் தான். இதன் பொருள் "ஆழமாகுதல்" என்பதாகும். கிணறு முதலானவற்றை ஆழப்படுத்தும் செயலான "தூர்வாருதல்" என்னும் சொல்லாடல் இன்றும் நம்மிடையே உள்ளது அல்லவா?. தூறிய பகுதியே "துறை" ஆகும். இது ஆற்றுத் துறை, படித்துறை முதலான அனைத்து நீர்த்துறைகளையும் குறிக்கும். ஆழமாகுதல் என்ற பொருளில் கொண்டால் இப்பாடலின் பொருள் இவ்வாறு வரும். "தோண்டிய அளவே மணற்கேணி ஆழமாகும். அதைப் போல கற்ற அளவே மாந்தர்க்கு அறிவு ஆழமாகும்." இதில் இருந்து சரியான திருக்குறள் என்ன என்று நீங்களே ஊகித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆம் அது இதுதான். "
தொட்டனைத்(து) தூறும் மணற்கேணி மாந்தர்க்கு (மேலும் பல உண்மைகள் இங்கே சொல்லப்படும்)
|
முகப்பு |