........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:128

விழித்துக் கொள்ளுங்கள்.

உன்னால் சாதிக்க இயலாதது
எதுவும் இல்லை...
நீ எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய்!

உன்னை வலிமையானவனாய்
நினைத்தால்
பலசாலியாகத் திகழ்கிறாய்!
வலிமை அற்றவனாய்
நினைத்தால்
பலவீனமாய்த் தெரிவாய்!

நான் சாதிக்க வல்லவன்
என்று எப்போதும்
நினைத்துக் கொண்டே இரு!

உனக்கே தெரியாமல்
உனக்குத் தேவையான
வலிமை உன்னுள்ளே
புதைந்து கிடக்கிறது

தூய்மை - பொறுமை - விடாமுயற்சி
இவையே உன் வெற்றிக்கு
இன்றியமையாதவை!

வாழ்க்கை என்னும் போர்களத்தில்
மடிந்து விடும் வீரனாய்
ஒருபோதும் இராதே
மரணத்தை விழுங்கும் மாவீரனாய்
எழுந்து நில்!

உன் நிலைமை
நினைத்து வருந்தாதே
லட்சியத்தை மட்டுமே
பற்றிக்கொண்டு முன்னேறு!

எழுந்திரு நண்பா - விழித்துக்கொள்
இனியும் தூங்க எண்ணாதே
அச்சம் உன்னை
மரணத்திற்கு அழைக்கும்

உன்னால் சாதிக்க வேண்டியது
ஆயிரம் ஆயிரம் இருக்கு.
அந்த லட்சியத்திற்காக உன்னை
அர்ப்பணிக்கத் தயாராய் இரு!

-த.சத்யா, இராஜபாளையம்.

 
m
 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.