........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:133

நீ செய்த பாவங்களை...

மனிதனே நீ
செய்த பாவங்களை
எண்ணி எண்ணி
பூமித்தாய் விட்ட கண்ணீர்
வற்றிவிட்டது.
அதனால்தான்
மழையில்லாமல் தவிக்கிறாய்...

மனிதனே நீ
செய்த பாவங்களை
எண்ணி எண்ணி
பூமித்தாய்க்கு இதயக்குமுறல்
அதனால்தான்
நிலநடுக்கத்தால் தவிக்கிறாய்...

மனிதனே நீ
செய்த பாவங்களை
எண்ணி எண்ணி
பூமித்தாக்கு இரத்தக் கொதிப்பு
அதனால்தான்
கடல் கொந்தளிப்பில் தவிக்கிறாய்...

மனிதனே நீ
பூமித்தாயின் இரத்தத்தையும்
ஆழ்துளைக் கிணற்றால்
உறிஞ்சி விட்டாய்
அதனால்தான்
நிலத்தடி நீரின்றி தவிக்கிறாய்...                                                  

- சுபாஷ் சரோன் ஜீவித், திண்டுக்கல்.

 
m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.