........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:138

மனிதாபிமானம் உள்ளவன்?

நெஞ்சமெனும் மனத்திரையில்
நீங்காமல் நாடகங்கள்
கொஞ்சமல்ல உணர்வலைகள்
கொந்தளிக்கும் ஓயாமல்

மிஞ்சவில்லை வாழ்விலொன்றும்
மீதமில்லை கண்ணில் நீர்
மஞ்சத்திலே சரிந்திருந்தும்
துஞ்சவில்லை கண்களிரண்டும்

வாழ்க்கையதில் சொந்தங்கள்
வந்து வந்து போய்க்கொண்டே
வந்தவழி மறந்த மனிதர்கள்
விதைத்து வைக்கும் பேராசை

பாதிவழி சிரித்துப்பின் பாவம்
பாதிவழி அழுதபடி நடக்கும்
பாவியவன் யாரது?
ஓ அவன் தான்.....
மனிதாபிமானம் உள்ளவனோ ?

-சக்தி சக்திதாசன், லண்டன்.

 
m
 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.