........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:148

மதம் எனும் மகத்துவம்

நம்பிக்கையின் அடிப்படையில்
நாடுகின்ற மதங்கள் வேற்கலாம்.
ஆட்சியாளர்களை வைத்து
அதிகாரக் கட்டிலில் மதம் ஏறலாம்.
விரிவாக்கப்பட வேண்டுமென
மதத்தின் பெயரால்
விருப்பமில்லாதவைகள் நிறைவேறலாம்.
ஆனால்... ... ... ...

தீவிரவாதத்தை எந்த மதமும்
தீர்ப்பாகச் சொன்னதில்லை.
வெட்டிக் கொல்வதையே
வேதமாகக் காட்டியதில்லை.
மதத்திற்கு என்றும்
மதம் பிடித்ததில்லை.

மதத்தின் பால் கொண்ட பற்றினால்,
மனிதனுக்கு வெறி ஏற்படாதவரை
மதத்தினால் என்றென்றும்
மனிதன் பெறுவது மகத்துவம்.
மற்றெதையும் விட
மதம் நிலைக்குமென்பது நிச்சயம்.

-சித.அருணாசலம், சிங்கப்பூர்.

 
m
 

சித.அருணாசலம் அவர்களது இதர படைப்புகள்

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.