........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 200

நாளை நன்மை இல்லை...!

வாழ்க்கையென்னும் சக்கரம்
வட்டமாக உருளுது...!
காலமென்னும் பாதையில்
காணுகின்ற காட்சிகள்...

உண்மையென்னும் சொல்லுக்கு
உண்மையான விலை என்ன ?
உண்மையாகத் தெரியவில்லை...
உண்மை அதுவே கேட்டிடுவீர்
உழைப்பு என்னும் செயலுக்கு
ஊதியமாய் என்ன உண்டு ?
நேர்மையின் வடிவமாய்
நிற்போரின் நிலை என்ன?

கற்றோர்கள் சபைதனிலே
கண்கட்டி வித்தைகளே
உள்ளோர்கள் மத்தியிலே
உள்ளங்கள் இல்லா நிலை...!
இருந்தும் இல்லாமல்
கிடைத்தும் கிடைக்காமல்
வாழ்ந்தும் வாழாமல்
வறண்ட சிரிப்புடன்..... !!

நடக்கின்றான் சித்தன் அவன்
நாடகத்தைப் புரிந்தவன்
நாளை என்னும் வெறும் சொல்லில்
நன்மை இல்லை அறிந்திட்டான்!

--சக்தி சக்திதாசன், லண்டன்.

 
m

 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.