........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 201

காதல் உண்மையானது...?

கவிஞனின் கற்பனை
காற்றைப் போன்றது-எங்கும்
செல்லும் எதிலும் நிறையும்...
அந்த கவிஞனுக்கும்
கற்பனையை உயிர்ப்பிப்பது தான்
காதல்..

அடி மனதில் தோன்றி
அன்பு வைக்கும் இடமெல்லாம்
அலையென பொங்கிவரும்
உன்னதமான அன்பு
காதல்..

வான் தேவதை பூமியின்-மீது
அதித காதலால் ஆனந்தமாய்
பெய்வித்தது மழையை..

பெய்த மழையின்-மீது
கொண்ட அன்பால்
மொட்டான ரோஜா
முதிர்ச்சியடைய..

ரோஜாவின் காதலால்-ராஜா
தன் வீட்டுத் தோட்டத்தில்
பறித்தான் முதிர்ந்த
ரோஜாவை..

ஓர் உயிரிலிருந்து ஓராயிரம்
உயிரில் கலந்து நிற்கும்
உண்மையான நிலையான
அன்பு காதல்...

-மு.சந்திரசேகர், இராஜபாளையம்.

 
m

 

மு.சந்திரசேகர் அவர்களின் மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.