........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 202

வேண்டும்! அமைதி வேண்டும்!!

புத்தனும் காந்தியும்
பிறந்த மண்ணில்
எங்கெங்கும் ரத்தத்துளிகள்!
வேத கோஷங்கள் ஒலித்த
புண்ணிய பூமியில்
இப்போது வெடிச் சத்தங்கள்!!
"எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் ஓர் குலம் "
என்ற பாரதியின் வாக்கினை
பொய்யாக்கும் இன-மதக் கலவரங்கள்!

அன்று
அடிமைத்தளையை ஒடித்திட
அனைவரும் இணைந்ததைப்போல
மீண்டும் ஒருமுறை இணைவோம்!
தீவிரவாதத்தை ஒழித்திட
தீவிரமாய் போராடுவோம்!!
"தனி மனிதனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தை அழித்திடுவோம்" என்றார் மகாகவி

இன்று
தனி மனிதனுக்கு
அமைதியும் வேண்டும்!
இல்லையெனில்
இந்த உலகமே அழிந்திடும்
இந்தத் தீவிரவாதங்களால்...!!

-மாரிமுத்து, அரியலூர்.

 
m

 

"ராம்கோ" மாரிமுத்து அவர்களது பிற படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.