........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 203

காதல் என்பது...எதுவரை?

காதல்...காதல்.. காதல்..
இது வெறும் போதையல்ல
இருமனங்களின் சங்கமம் காதல்..

இது ஒரு
அழகான கனவு
காதலிப்பதும்
காதலிக்கப்படுவதும்
அவனுள் இன்பத்தைத் தரும்

கண்களில் இருந்து
வருவது காதலல்ல
அது காமம்
இதயத்தில் இருந்து
வருவதுதான் காதல்

காதல் அவனை(ள)
தூங்க விடாது
அது மகிழ்ச்சியைத் தரும்
ஆனால்
மகிழ்ச்சியாக இருக்க விடாது

காதல் சிரிக்கவும் வைக்கும்
சில நேரங்களில்
அழவும் வைக்கும்

காதலுக்காக
உயிர் விட்டவர்களும் உண்டு
காதலை அடையாமல்
உயிரை விட்டவர்களும் உண்டு

வாழ்வின் ஒருமுறை
வருவதுதான் காதல்
காதல் கசப்பானதல்ல

ஒருவரை ஒருவர்
புரிந்துகொண்டால்..
காதல் சுகமானது..
இனிமையானது

ஒருவருக்கொருவர்
விட்டுக்கொடுத்தால்..
காதல் ஒரு காவியம்
அது மூடிய புத்தகமாக
இருக்கவேண்டும்
சில வரிகள்
வாசிக்கப்படவேண்டும்
சில வரிகள்
மறக்கப்படவேண்டும்

காதல் ஒரு சிற்பம்
மரணத்தைஅடைந்தாலும்
தோல்வியில்லை காதலுக்கு..
உன்னதமான காதல்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்
இருமனங்கள் இணைந்திருக்கும் வரை...!

--த.சத்யா, இராஐபாளையம்.

 
m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.