........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 215

ஆசியுடைய வாசிப்பு

வாசிக்க வாசிக்க மன
பாசிப் படை விலகும்.
தூசியும் கரை ஒதுங்கும்.
யோசிக்கும் உணர்வு பெருகும்.

யோசிக்க சந்தேகம் உயரும்.
யோகமான தேடல் பெருகும்.
வாய்ப்புகள் எம்மை நெருங்கும்.
வாய்த்திடும் பல நிகழ்வுகள்.

வாத்தியாராகும் இன்பம் துன்பம்
நேத்திரம் திறக்க வைக்கும்.
காத்திரமான அனுபவ பாடம்
கோத்திடும் மனப் பக்குவம்

பூவெனப் பயன்பாடு பூக்கும்.
பூவாச மதிப்பு பெருகும்.
பூரண மகிழ்வு மலரும்.
பூசிடும் செழுமை வாசிப்பால்.

உன்னை மறப்பாய்!
உலகை அளப்பாய்!
உண்மை உணர்வாய்!
ஊற்றான அறிவால்!!

-வேதா இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.
 

 
m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.