........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 216

வருது! வருது! தேர்தல் வருது!!

கட்சியின் கொள்கை
நோக்கமெல்லாம்
கட்சியின் துவக்கத்தில்தான்...ஆனால்
அடுத்த நிமிடமே
அகப்பட்டதை அள்ளிவிடும்
அசத்தலான திட்டங்கள் ஆரம்பம்!!
தொகுதியில் ஒன்று
தொக்கி நின்றாலும்,
கொள்கை மாறிவிடும்!
கோஷங்களும் மாறிவிடும்!!

ஆயிரங்களை வைத்து
லட்சத்தைப் பிடிக்கலாம்.
லட்சத்தைப் போட்டால்
கோடியை எடுக்கலாம்.
கொள்ளையடிப்பதற்குக்
கூட்டும் சேரலாம்!!

எவ்வளவுதான் படித்தாலும்
ஏமாற்றம் என்பது
எளிதாய்ப் போய்விட்டது.
எத்தனை எத்தனை
ஏமாற்றும் உத்திகள்! 
எப்படித்தான் கண்டுபிடிக்குமோ
இந்தக் கட்சிகள்!!

எப்படியோ இங்கே
சொந்தங்களிடம் மட்டும்
சொத்துக்கள் குவியும்.
வாரிசுகளாய் பலர்
வந்து கொண்டே இருக்கிறார்கள்!
தேர்தலும் தொடர்ந்து
வந்து கொண்டே இருக்கிறது!

-சித. அருணாசலம், சிங்கப்பூர்.
 

 
m

 

சித.அருணாசலம் அவர்களது மற்ற படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.