........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 217

புதுமை புரிந்தாயா மனிதனே...!

கடவுள் என்றும்,
அதன் மீது பயம் கொள் என்றும்,
கலாச்சாரம் என்றும்,
அதைப் புரிந்துகொள் என்றும்,
நாகரீகம் என்றும்,
அதை தெரிந்து கொள் என்றும்,
பண்பாடு என்றும்,
அதை உணர்ந்து பண்படு என்றும்,
இலக்கியங்கள் வாயிலாக‌
இயக்கங்களை உபதேசித்தது
இப்படி வாழவேண்டாம் என்றும்
இப்படி வாழ்ந்தால் சிறப்பு என்றும்
ஏற்கனவே கண்டுகொள்ளப்பட்ட‌
வாழ்வியல் முறைகளை
மீண்டும் கண்டுபிடிக்க‌
வேண்டாம் என்றுதான்...

அவைகளைப் புறந்தள்ளி
புர‌ட்சி, புதுமை என்று
பெயர்கள் சொல்லி
அதே இல‌க்கிய‌த்தைப்
பொருள் விளங்காமல்
மொழி மாற்றுவ‌தில்,
மானுட‌ப்ப‌த‌ரே, நீ
என்ன‌ விடை க‌ண்டாய்...
இப்ப‌டி கால‌த்தை
விர‌ய‌ம் செய்திட
என்னென்ன விலை கொடுத்தாய்...

புதுமை என்ப‌து
கால‌ மாற்ற‌த்தில்
சிதில‌ம‌டைந்த பூந்தொட்டிகளை
அக‌ற்றிவிட்டு பூச்செடிக‌ளைப்
பாதுகாப்ப‌து...
பூச்செடிகளைக் களைந்துவிட்டு
காகிதப்பூக்களால் பூந்தொட்டிகளை
நிரப்புவது அல்ல...

புதுமை என்ப‌து
வேங்கையின் பாதுகாப்பில்
புள்ளிமானைத் துள்ளவிடுவது ...
வேங்கையின் வேகத்தைக்
காரணம் காட்டி
புள்ளிமான் கொல்லப்படுவதை
நியாயப்படுத்துவதல்ல...
புரிந்ததா மனிதனே...!

-ராம்ப்ரசாத், லண்டன்.
 

 
m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.