........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 218

வெற்றி கொள்வான் தமிழன்!

கொந்தளித்து எழுந்தக் குருதிக்
கொழுந்து விட்டு எரிந்ததடா
கொடுமைப்படும் தமிழினத்தைக்
கொள்கை வகுக்கச் செய்ததடா!

வந்தானை வாழவைத்தோம்
வணங்கிக் கூனி நெளிந்து வாழ்ந்தோம்
வைத்து விட்டான் அடிமையாக-முத்து
வகைச் செய்தான் நம்மை வளமையாக்க.

கொடிக் காத்தான் குமரன்-தமிழினக்
குடிக் காத்தான் முத்துக்குமரன்
விழிக்க வைத்தான் நம் தலைவன்
வெற்றி வாகைக் கொள்வான் தமிழன்

கடைக்கோடி எண்ணிவிட்டான்
கால் ஒடிக்க முடிவெடுத்தான்
நொண்டியடிக்கப் போகிறான்-பலனாய்
நொந்துச் சிதறப் போகிறான்.

சாதிமதவேறுபாடு தவிர்த்தெழுவான் தமிழன்
தரணியில் புகழ்படைக்க தான்உழைப்பான் தமிழன்
ஊடுறுவிப் புல்லர்களை ஒடுக்கிடுவான் தமிழன்
உலகோர் வாழ்வுபெற ஒத்துழைப்பான் தமிழன்.

-பொன்பரப்பியான்
 

 
m

 

பொன்பரப்பியான் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.