........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 219

ராம்பிரசாத் கவித்துளிகள்

காதல்

கண் தானம் கேட்டவர்களுக்கு
இல்லை என்று கைவிரித்தேன்...
அவர்களுக்கு என்ன தெரியும் ...
என் கண்கள் உன்னை தவிர
வேறு யாரையும்
பார்ப்பதில்லை என்பது ....

ஓவியம்

ஜன்னல்கள் போர்த்திக்கொண்ட
மழைத்துளிகள் வழிவிட்டது
ஒரு அழகான கவிதைக்கு ...
விரல் தோய்த்து
வரைந்திருந்தேன் அவள் பெயரை...
ஓவியமாக!....

கவிதை

எழுதியது உன் இதழ்கள்
என்பதால்தானோ என் பெயரும்
கவிதை ஆனது!...

கூந்தல்

கூட்டம் கூட்டமாய்
மேகங்கள் கடந்து
கண்டிருக்கிறேன் ...
இதென்ன கற்றை கற்றையாய்
மேகம்!!
அவள் கூந்தலோ !!....

கைதி

என்னைத் தெரிந்துகொண்டே
யாரென்று கேட்டவளுக்கு
பதிலுரைத்தேன் ...
உன் கருவிழிகள்
சிறையெடுத்த காட்சிகளில்
நானும் ஒரு கைதி...

-ராம்ப்ரசாத், லண்டன்.
 

 
m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.