........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 220

இதயச்சிறைக்கு மாற்றம் வருமா?

கடவுளைக் கண்ணால்
கண்டதில்லை எனினும்
காணக்கிடைத்தது
இது நாள் வரையிலென்
தாயின் மடியில்,
இனியும் காணக்கிடைக்கும்
கண்மணி உன்
கண்களின் வசீகரத்தில்...

இருபுறம் பிரியும்
ஒற்றைச் சாலையையொத்த‌
உன்னிரு புருவங்களில்
எந்தப்புறம் சென்றாலும்
சிக்கப்போவதென்னவோ
உன் கருவிழிச்சிறைகளில்தான்
என்ற போதிலும்,
அந்தச் சாலைகளில்
மீண்டும் மீண்டும் பயணிக்கவே
ஆசையெனக்கு...
சிறை செல்லும்முன்
உன்னை ஒன்று
கேட்க விழைகிறேன்,
உன் விழிச்சிறையினின்று
எப்போதென்னையுன்
இத‌ய‌ச்சிறைக்கு
மாற்ற‌ப்போகிறாய்?

-ராம்ப்ரசாத், லண்டன்.
 

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.