........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 221

ஈழத் தமிழன் இவன்...?

உயிர் ஒன்று மட்டுமே
ஊசலாடும் நிலையில்
ஒட்டிக் கொண்டிருக்க,
கால்களுக்குக் கூட
போக்கிடம் இல்லாமல்
கவலைகள் மலையாய்க்
கனத்துக் கிடக்கும் மனது.

முட்களே இங்கு
ரோஜாவைக் குத்திக்
காயப் படுத்திக்
கசக்கிப் பிழியும் நிலையில்,
இடுப்புக்கு மேல் துணியின்றி
எல்லோரும் காந்திகளாய்...
சுற்றம் என்பதே புதிராகி
முற்றும் துறந்த கீழ்நிலையில்
ஒட்டுமொத்த இனமே
ஒடுங்கிப் போனது.

உலகத்தில் தமிழுக்கு
உயிர் கொடுத்த கூட்டம்,
இனபேதத்தைப் பயிராக்கி
ஈனத்தை வளர்க்கும்
சர்வாதிகாரச் சாக்காட்டில்
சதிராடித் திணறுகிறது.

புத்தனைக் கூடத் தனது
போதனைகளில்
பொல்லாங்கு தெரிகிறதா என்று
திருப்பிப் பார்க்கவைக்கும்
வெறுப்புகளைச் சுமந்தவர்கள்
விதைத்த வினை இன்று
வேதனைகளை விளைச்சலாக்கி
வேரூன்றி நிற்கிறது.

-சித. அருணாசலம், சிங்கப்பூர்.
 

 

 

 

 

 

m

 

சித.அருணாசலம் அவர்களது மற்ற படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.