........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 223

மௌனம் கலைந்தால் காதல்?

மரங்களில் பரிசத்தில்
அந்த ஒத்தையடிப் பாதையில்
நீயும் நானும்...
நம் இருவரின் கண்களும்
பேசிக் கொண்டதே ஒழிய
நமக்கிடையே மௌனம்
தான் பேசியது
ஒருவரை ஒருவர்
புரிந்து கொண்டாலும்
நம் இருவருக்குமிடையே இருப்பது
காதலா..நட்பா..
என்று தெரியாமல்
தவிக்கும் நம் மனதை
இந்த மரங்கள் அறியுமோ...?

நாம் மனம்விட்டு பேசவே
இந்த இடத்திற்கு வந்தோம்
இன்னும் நமக்கிடையே மௌனம்
மட்டும்தான் பேசுகிறது
நம் மெனளம்
கலைவதற்கான பேச்சு எப்போது?

அன்பே நீ
முதலில் சொல்வாய்
என்று நானும்
நான் முதலில்
சொல்வேன் என்று நீயும்
எத்தனை நாட்களை
நாம் கடந்து விட்டோம்
போதும் இனியும்
நம் மௌனம் நீடித்தால்
நமக்குள் காதலா... நட்பா...?
என்றே தெரியாமல் போய்விடும்..!

காதலாய் இருந்தால்
உன் மௌனத்தை கலைத்துவிட்டு
சம்மதத்தைச் சொல்லிவிடு...!
நட்பாய் இருந்தால்
வார்த்தை ஒன்றும் பேசாமல்
மௌனமாகவே இருந்து விடு...!!

-த.சத்யா, இராஜபாளையம்.
 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.