........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 229

பிரிவு சாத்தியமா?

 

திரும்பும் இடமெல்லாம்
நீயிருக்கிறாய் என்ற‌
நினைப்பிலென் பொழுதுகள்
விடிகிறது, இனிமையாய்...

உன்னை ஒரு நாள்
பார்க்கவில்லை என்றாலும்
இந்த ஜென்மமே முடிந்த‌
ஏக்கம் வருகிறது, தனிமையாய்...

உன் இதழ்களிலிருந்து
காற்றுடன் கலந்துவிட்ட
வார்த்தைகள் தாய்ப்பசுவை
இழந்த கன்று போல்
ஒல‌மிடும் என் செவிக‌ளில்...

க‌ண்க‌ள் விடும் க‌ண்ணீரில்
ம‌ன‌து க‌ன‌த்துப்போகும்
உன் நினைவுக‌ளில்...

பூவிலிருந்து ம‌ண‌த்தை
பிரிப்ப‌து சாத்திய‌மெனில்
என்னிட‌மிருந்து உன் நினைவுக‌ளைப்
பிரிப்ப‌தும் சாத்திய‌மே....

-ராம்ப்ர‌சாத், சென்னை.

 

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.