........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 234

சம்மதம் சொல்லிவிடு...!

 

உன் மௌனத்தையே
நான் சம்மதமாய்
ஏற்றுக் கொள்ளவா? -இல்லை
உன் புன்னகையை
நான் சம்மதமாய்
ஏற்றுக்கொள்ளவா?
என் வீட்டின் அருகில்
தண்ணீர் குடத்தை
சுமந்து போகும் போது
என்னை நீ
பார்க்கும் பார்வையை
சம்மதமாய் ஏற்றுக்கொள்ளவா?-இல்லை
கல்லூரி வாசலில்
நான் உன்னை
பார்க்கவில்லை என்று நினைத்து
நீ என்னை
மறைந்திருந்து பார்ப்பதை
சம்மதமாய் ஏற்றுக் கொள்ளவா?
பெண்ணே
சொல்லிக்கொண்டே
போகலாம் நீ
என்னை நேசிப்பதை...!
கண்மணி காத்திருக்கிறேன்...! நீ
காதலிப்பாய் என்று...
சம்மதம் சொல்லிவிடு!
நம் காதலுக்கு
சம்மதம் சொல்லிவிடு...!

- த.சத்யா, இராஜபாளையம்.

 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.