........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 240

விந்தை உலகம் பாரீர்!

 

சந்தைக் கூட்டமாய் முந்தையோர்
மந்தை வாழ்வு வாழ்ந்தார்.
சிந்தனை அபிவிருத்தி கொண்டார்.
சுந்தர மொழி கண்டார்.
கேந்திரமான மொழியால் அறிவியல்
சுதந்திரச் செயற்பாடு கண்டார்.
சந்திரன் வரை சென்றார்!
விந்தை வளர்ச்சி கொண்டார்!

விரல் நுனியால் கணனியில்
பெரும் வித்தகம் வளர்த்து
கரை காணுகிறார் உலகை!
உருவாக்கும் உயர்வு பாதியாக,
கிருமிகள் அனுப்பி வளர்ச்சியை
கருக்கவும் செய்கிறார் பாரீர்!
வருமானம் அழித்தலென இன்புறும்
விந்தை உலகம் பாரீர்!

அமிலக் குண்டுகள் எறிந்து
அருமை உயிர்களை அழித்து
அங்கங்கள் இழந்து மனிதரை
அவதியில் வாழ விட்டு
அதில் திருப்தியடையும்
குரூர மனிதக் குணம் பாரீர்!
குருதி வழியும் கரங்களோடு
சிரிக்கும் மனிதம் பாரீர்!

பணம், நிலம்; புகழுக்காய்
நிணம் நாறும் செயல்களால்
குணம் தூர எறிகிறார்.
வட்டங்கள் இணைவதைப் போல
தொட்ட இடத்திற்கே மறுபடியும்
எட்டுகிறார் அந்தோ பரிதாபம்!
மந்தையாக இவன் கீழே!
விந்தை உலகம் பாரீர்!

-வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.
 

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.