........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 241

பனித்துளி புகட்டும் பாடம்

 

பச்சைப் பசேலெனும்
பசும் புற்தரையினில்
பொன்னொளி பூத்தது
போலொரு பனித்துளி
மின்னுது நுனியில்

உள்ளத்தின் விசாலம்
உருவத்தில் இல்லை
உண்மை அதனை
உணர்த்திடும் பனித்துளி

சின்னஞ்சிறிய பனித்துளியினுள்
அழகாய்த் தெரியுது
ஆலமரத்தின் அழகிய வடிவம்
அறியும் உள்ளம் வாழ்வின் உண்மை

இயற்கையின் வனைப்பில்
இத்தனை படிப்பினை
இருப்பதை அறியாமல்
இறுமாப்புக் கொள்வது சரியோ

இதயம் விரித்து அன்பைப்
பொழிந்து இன்பம் காண
செல்வம் வேண்டாம்
இளகிய மனமே போதும்!

-சக்தி சக்திதாசன், லண்டன்.
 

 

 

 

 

 

m

 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.