........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 251

மனிதனிடம் மாற்றம்?

இருளைத் தூங்க வைத்து
பொழுதைத் துவங்கும் கதிரவன்.
புல்லின் மேல் பனித்துளி
கிரீடமாய் இருக்க,
புள்ளினங்கள் விழித்துப்
புத்துணர்வுப் பயணம் துவக்க,
மெத்தையான வைக்கோலில்
மேனிகிடத்திய கால்நடை எழ
இவையெல்லாம் மாற்றமின்றி
எப்போதும் போல் தான்.

ஊரைக் கைக்குள் போட
யாரைக் கவிழ்க்கலாம்.
பிழைக்கும் வழிதேடப்
பொய்கள் என்ன கூறலாம்.
உள்ளம் வெறுக்க
உதட்டில் சிரிப்பை
எப்படிக் காட்டலாம் - என்று
மனிதனின் சிந்தனைகள் மட்டும்
மாற்றம் கண்டு
மக்கிப் போனது எதனால்?

 -சித. அருணாசலம், சிங்கப்பூர்.
 

 

 

 

 

 

m

 

சித.அருணாசலம் அவர்களது மற்ற படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.