........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 257

வந்துவிடு அன்பே!

அன்பே !
உன்னை நான்
காண்பதென்றோ?
உன்னை காணாமல்
என் கண்கள்
உறங்க மறுக்கின்றன
இமைகள் மூடி
இருந்தபோதும் உன்னையே
நினைத்து
உறங்காமல் துடிக்கின்றன.
லப்டப் லப்டப்
என்று துடிக்கும்
என் இதயமும்
நான் வருகிறேன்
என்று நீ சொன்ன
வார்த்தையைச் சொல்லித்தான்
உன்னை பார்க்கப் போகும்
சந்தோசத்தி;ல் துடிக்குது..
உன்னை பார்க்கும் போது
இல்லாத வலியைவிட
பார்க்காமல் இருக்கும்
வலியைத்தான் என்னால்
தாங்க முடியவில்லை
காற்றாய் இருந்த
என் மனதில்
புயலாய் வீசி மறைந்தாய்
உன்னை பார்த்ததினால்
இந்த மாற்றமா?
இல்லை
மாற்றம் ஏற்படவே
நீ வந்தாயா..
என் இதயத்தில்
கண்மணியே
வந்துவிடு சீக்கிரம்
வந்துவிடு உன்னையே
நினைத்து என்
உயிர் வெகுதூரம் போகும்முன்...

-த.சத்யா, இராஜபாளையம்.
 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

    முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.