........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 258

புன்னகையின் மகிமை

அற்புத ஆப்பிள் இதழோரம் சற்று
சொற்பமாய் இழுத்த நிலாக்கீற்று.
முற்றத்து வெண் முல்லைச் சிலிர்ப்பு
கற்பக விதை அப் புன்னகைப்பூ.
மூடிய இதழ்களின் இணை விரிப்பு
சூடிய புன்னகை மகிழ் விரிப்பு.
கோடிடும் மனித நேயத் தரிப்பு
வாடிடும் மனதிற்கு இன்பத் துளிர்ப்பு.

உலக உயிர்கள் சிந்தாத வகை
உணர்வுள்ள மனிதப் புன்னகை.
பொன்னகை தராத அழகினை
பின்னிடும் மனிதப் புன்னகை.
இருட்டுலகின் ஒளிக் கீற்று வகை.
அருட்டும் பயம் விலக்கிய நிலை.
முரட்டுக் கைப்பிடி இளக்கிய நிலை.
திரட்டும் நம்பிக்கை ஒளிப் புன்னகை.

கண் நகை ஓவியம் தீட்டுவதும்
புன்னகை காவியம் காட்டுவதும்
நன் நகை மாணிக்க வகையாம்
புன்னகை மனிதப் பொக்கிசமாம்.
உன்னத விழிகளின் புன்னகை
உள்ளத்தில் உள்ளதைக் காட்டிவிடும்.
பொன்னிதழ்ப் புன்னகை வீச்சிலே
உண்மையும் நன்கு வேசமிடும்.

மழலைப் புன்னகைப் பசும் தோரணம்
மனித உறவுத் தேடல் காரணம்.
மலரும் புன்னகை ஒரு பூரணம்
பலரும் விரும்பும் நல் ஆரணம்.
பன்னகை சாதிக்காச் செயலினை ஒரு
புன்னகை சாதிக்கும் வலுவுடைத்து.
என்னகை நன்னகை உலகிலென்றால்
அன்னகை புன்னகை எனக் கொள்ளலாம்.

- வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.

 

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

    முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.