........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 259

தாழ் பணிந்தேன்.

சுந்தர நிலவென்னை
சுண்டியழைத்திடுமோ...

விண்ணின் மீன் போல்
சுடர் வீசிய
சுந்தரியின் எழில் நெற்றி கண்டு
நானென் உறுதி தளர்ந்தேன்

போர்க்களத்தில்
தீரமுடன்
வீரமறவர் வீசும்
கொலைக் கருவி கண்டும்
நிலை தளராத நான்
பேதைப் பெண்ணின் நெற்றிக் கண்டு
போதையுற்றேனே...

பாய்ந்து வரும் படையை
பயமின்றி தாக்கி அழிப்பேன்
பகைவரும் என்திறம் கண்டு
பகை மறந்து பாராட்டுவர்...

இன்று
சின்னப் பெண்ணொருத்தியின்
சிறுநுதல் அழகில்
என்னையிழந்து... அவளிடம்
தாழ் பணிந்தேன்.

- ஆர். கனகராஜ்.
 

 

 

 

 

 

m

 

ஆர்.கனகராஜ் அவர்களது மற்ற படைப்புகள்

    முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.