........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 260

துய்த்ததைச் சொன்னேன் துணிந்து!

பாலும் புளிக்கப் பழம்கசக்க வேறெதன்
பாலும் இளநெஞ்சம்; பாயாதப் -பாலுமிப்
பாலும் இடம்பெயராப் பார்வைஎன் பார்வையைப்பெண்
பாலும் பருகலுற்றாள் பார்த்து!

பெண்டகை யாட்றன் பிறங்கும் அழகையெல்லாம்
கொண்டகையாற் றொட்டுக் குதுகளித்தேன்! -கொண்டலைப்போல்
கூத்தாடும் நுன்னிடையில் கூத்தாடக் கட்டில்மேல்
பூத்தாடிற் றின்பம் புலர்ந்து!

இளநீராய் எண்ணி இளமுலைகள் பற்றி
உளமாறக் கண்டேன் உருசி -தளதளக்கும்
சிற்றிடையில் கோலோச்ச சீக்கிரமே கூப்பிட்டுப்
பெற்றிட்டாள் இன்பம் பெரிது!

முக்கண்கள் ஈசனுக்கு மட்டும்தான் என்றுரைத்த
மக்கன்யார்? கண்டால் வசைபாடு! -மொக்காய்
இருகண் இவள்முகத் தொன்றிடையில் கண்டேன்
கருவிழி இல்லாத கண்!

உச்சிமுதல் கால்வரை நச்செனவே இச்சுவைக்க
மெச்சியென் மெய்யணைத்தாள் மெல்லிடையாள்! -அச்சச்சோ
தைத்ததடா மெத்தைமுள்; தையல் சுகத்தின்முன்
கைத்ததடா பேரின்பம் காண்!

பொத்தானைத் தான்நீக்கப் பொங்கிவரும் மோகத்தால்
அத்தானைக் கட்டி அணைத்திட்டாள்! -பத்தானை
வேகத்தைக் காட்டி விடியும் வரையவளின்
மோகத்தைத் தீர்த்தேன் முனைந்து!

காட்டாறு போலத்தான் கட்டடங் காதாட
பாட்டாறு போல்பாவை பாடினாள்! -கேட்டபடி
மெத்தை முறிகிற வேகத்தை நான்காட்ட
தத்தை தவித்தாள் தளர்ந்து!

சந்தனத்தைப் பூசி சரிகைவெண் பட்டிட்ட
செந்தனத்தைக் காட்டிச் சிரித்திட்டாள்! -எந்திறத்தை
நான்காட்ட நாணி நயனத்தை மூடினாள்
தேன்கூட்டில் சிந்திற்றே தேன்!

பொங்கும் புதுநீரால் புல்லரித்தாள்; பூவையவள்
தங்கத் தளிர்வாயில் தேனெடுத்தேன்! -மங்கையில்லா
சொர்க்கம்வே றெங்காம்? சுகப்போழ்து வேறேதாம்?
தற்குறிகாள்! சாற்றிடுவீர் தான்!

-அகரம்.அமுதா
 

 

 

 

 

 

m

 

அகரம் அமுதா அவர்களது மற்ற படைப்புகள்

    முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.