........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 261

நண்பனுக்கு ஒரு கடிதம்

அன்பு நண்பனே !
உள்ளத்தின் வெள்ளத்தை
உன்னிடம் பகிர்ந்திட
உள்ளூறும் ஆசையால்
உவக்கின்ற வரிகளிவை

அழகான கோடையிது
ஆனந்தம் பொழியுது
ஆதவனின் கதிர்களெனை
அரவணைத்து மகிழுது

தோட்டத்து மலர்களில்
தோற்றிடும் வர்ணங்கள்
தோன்றாத கற்பனைகளை
தோற்றுவித்து மயக்குது

மாலை வெய்யில் பொழுதில்
வீசும் மெல்லிய தென்றல்
ஆசையாய் மேனியில் தவழ்ந்து
அமைதியான சுகத்தைத் தூவுது

பச்சைப் புல்லின் விரிப்பு
பசுமையான வனப்பு
புரிய வைக்கும் உண்மைகள்
புரிந்து கொண்டால் நன்மைகள்

விரிந்து நிற்கும் மலர்களும்
விரியத் துடிக்கும் அரும்புகளும்
சரிந்த நேற்றைய மலர்களையும்
ஒன்றாய்த் தாங்கும் செடிகள்
ஓங்கிச் சொல்லும் உண்மை ஒன்று

இளமை, நடுமை, முதுமை
அனைத்தும் ஒன்றாய் சேரும் போதே
வாழ்க்கை என்பது முழுமை பெறும்
வாழ்வை நன்றாய் வாழ்ந்து முடிப்பது
மானிட ஜென்மக் கடமையன்றோ

இவைகளின் நினைப்பின்
இடையே கொஞ்சம் வெதும்பல்
இணைபிரியா எந்தன் தோழன்
உன்னைப் பிரிந்த எண்ணம்
கொஞ்சம் நெஞ்சை வாட்டும்

உணர்வுகளை வரிகளாக்கி
இதய ஏட்டில் எழுதிய
என் கவிதையை
எல்லோருடனும் பகிர்ந்தேன்.

-சக்தி சக்திதாசன், லண்டன்.

 

 

 

 

 

 

m

 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

    முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.