........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 265

உயிர் மறைவில் ஒன்றாக...

கண்மணியே
என் மனம் நிறைந்தவளே!
உன்னை நான் இப்படி
அழைக்க இதைவிட
அழகான வார்த்தை
உலகில் எங்கும் இல்லை!

நீ எனக்கு உறவும் இல்லை
எந்த உரிமையும் உன்னிடமில்லை
எனக்குள்
ஏதோ ஓர் சக்தி
உன்னையும் என்னையும்
இணைத்துவிட்டது...

பார்க்கப் பிடிக்கும் முகம்
உன்னிடத்தில்....
அன்பைக் காட்டும்
உன் கண்கள்
மனதை ஈர்க்கும்
உன் பேச்சு
என அத்தனையும்
என்னை உன்னிடத்தில்
சரணடைய வைத்தாச்சு.

வளர்ந்த அன்பினால்
என்னுள் இன்பம்.
நீ ஒரு கணம்
பேசாவிட்டலும்
துடிக்கும் இந்த மனம்.
உன்னை நினைக்காத
பொழுதுமில்லை
நீ இல்லாத இடமும்
என்னிடமில்லை.

ஆழ்மனதில் அன்பின் வடிவமாய்
நீ என்னுள் நுழைந்தாய்
உன் அன்பின் பரிசத்தில்
என் மனம் புண்ணாகிப்
போய் வலித்ததென்னவோ
உண்மைதான்
அன்பு காதலாய் மாறி
இன்று காவியமாய் நீ...
சுகத்தை தந்தவளும் நீயே!
வலியை கொடுத்தவளும் நீயே!!

இப்போது இருவேறு இடங்களாய்
வெவ்வேறு திசையில்
நீயும் நானும்...
நம்மைச் சுற்றி நெருப்பாய்
நம் பெற்றோர்களும்...

என்னவளே
காதலுக்காக உயிரை
கொடுப்பதும் தப்பில்லை
நாம் இருவரும் சேர்ந்தே
மரணத்தை தொடுவோம்
உறவில் சேராத நாம்
உயிர் மறைவில் கலப்போம் ஒன்றாக...

-த.சத்யா, இராஜபாளையம்.

 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

      முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.