........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:27

சும்மா இருக்கும் நல்லவனே...

சும்மா இருக்கும் நல்லவனே...!
உன்னால் நன்மை
உலகுக்கு இல்லையடா...!

தவறுகள் நடந்தால்
தட்டிக் கேட்பதில்
தயக்கம் ஏனடா?

உணர்ச்சிகள் இன்றி
உயிரோடிருப்பது
உலகுக்குப் பாரமடா...!

சமூகம் என்பது
உன்னையும் சேர்த்தே
உணர்ந்துகொள் மானுடா...!

சரி சரி என்றே
சகித்துப் போயிட்டா
தவறுகள் பெருகுமடா...!

நமக்கேன் வம்பென்று
நழுவிப் போவது
நற்செயல் இல்லையடா...!

நீயும் ஒருநாள்
நிம்மதி இழப்பாய்
நினைவில் கொள்ளடா...!

தயக்கம் போக்கி
தட்டிக் கேட்டால்
தவறுகள் குறையுமடா...!

ஒவ்வொரு மனிதனும்
இதனை உணர்ந்தால்
நாடே உயருமடா...!

-இராம.வயிரவன்,   சிங்கப்பூர்.

 

 

m

 

இராம.வயிரவன் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.