........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 270

பிரதீபா கவிதைகள்

 

காதல்

கதிரவன்
ஒளிக்க‌திர்க‌ளில்
மலர்ந்த மலரும்
நானும் ஒன்றென்றாய்.
உண்மை என்றுணர்ந்தேன்.
உன் பார்வையில்
மொட்டாயிருந்த
நான் மலராய்
மலர்ந்த மறுகணமே.......

மொழி

நாம் உரையாட
பல மொழிகள்
இருந்தும்
நீயும் நானும்
தனித்து நிற்கிறோம்
மௌனமாய்
நம் இதயத் துடிப்புகள்
பேசுகின்ற மொழியை
ரசித்தபடியே...

இதயத்துடிப்பு

உன் பார்வை வீசிய
காந்த அலைகளில் நனைந்த
என் மனம்
என்னுடன் வீடு திரும்ப
மறுத்து துள்ளி குதிக்கிறது
என் இதயத்துடிப்பாய்........

மின்விசிறி

தூணில் கட்டிவைத்த
பிள்ளை விளையாட்டோ,
நீ சுற்றுவது!!
மின் தாக்கிப் பலர் மடிய,
நீ மட்டும்
அந்தரத்தில் தொங்கி உனக்கு
உயிர் கொடுத்தமைக்கு
மின்னுக்கு விசிறி ஆனாயோ....

-பிரதீபா, புதுச்சேரி.
 

 

 

 

 

 

m

 

பிரதீபா அவர்களது இதர படைப்புகள

       முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.