........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 269

காதல் எனும் மூன்றெழுத்து

வாங்கி வைத்த‌
இரட்டைக்குவளை பழச்சாறு
தீர்ந்து போனால் எங்கே
நாளை சந்திப்போமெனச் சொல்லி
இன்று
பிரிய நேரிட்டு விடுமோவென்று
வார்த்தைகளை மட்டும் பருகி
சிந்தனைகளை மட்டும் சீரனித்தே
தொடர்ந்து அமர்ந்திருக்கிறோம்
நீயும் நானும்...

எப்போது சொல்வானென நீயும்
இன்றாவது சொல்லிடலாமென நானும்
நம் தயக்கங்களின் அரவணைப்பில்
கட்டுண்டு விழுந்து கிடக்கின்றோம்
மீண்டெழ வழி தெரியாமல்...

நான் சொல்ல யத்தனிக்கும்,
நீ கேட்க காத்து நிற்கும்
அந்த மூன்றெழுத்து
மந்திர வார்த்தைகளை
ஒருவாறு யூகித்தபடி,
நமுட்டுச் சிரிப்பொன்றை
உதிர்த்துப் போகிறான்
கடைச்சிறுவன்
நம்மை நோக்கி...

-- ராம்ப்ரசாத்.
 

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

       முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.