........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:29

நீ ஆசைப்பட்டால்... !

அன்பே...!
நீ ஆசைப்பட்டால்...
உன் வீட்டுத் தோட்டத்தில்
செடிகளாய் அவதரிப்பேன்

நீ ஆசைப்பட்டால்...
உன் கூந்தலில்
மலராய் சூடியிருப்பேன்

நீ ஆசைப்பட்டால்...
உன் கண்களில்
புருவங்களாய் வளைந்திருப்பேன்

நீ ஆசைப்பட்டால்...
உன் உதடுகளில்
புன்னகையாய் மலர்ந்திருப்பேன்

நீ ஆசைப்பட்டால்...
உன் நெற்றியில்
குங்குமமாய் காட்சி அளிப்பேன்

நீ ஆசைப்பட்டால்...
உன் விரல்களில்
நகமாய் வீற்றிருப்பேன்

நீ ஆசைப்பட்டால்...
உன்னுள் எனக்கு
இடமளிப்பாய் என்றிருந்தால்
என் உயிரையும்
உனக்கு தாரை வார்ப்பேன்...

- த.சத்யா, இராஜபாளையம்.

 

 

m
 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள்

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.