........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:30

மேதினம் ..... மேதினம் ....!

பிறந்தது மேதினம் புலர்ந்தது பூமியில்
சிறந்ததா? உழைப்பவர் வாழ்க்கை ? சிந்தித்திடு
மறந்தது மனிதர் மனிதாபிமானத்தை உணர்ந்திடு
பறந்தது சமத்துவம் நிறைத்தது விழிகளைக் கண்ணீர்

இருப்பதைப் பகிர்ந்திடும் உணர்வுகள் இறந்தது
இல்லாதவனிடம் மேலும் இல்லாமை நிறைந்தது
இதயத்தை விற்று இருப்பதைப் பெருக்கிடும் உலகத்தில்
இனியிங்கே ஏனொரு மேதினக் கொண்டாட்டம் ?

மேதினம் ! மேதினம் எனக் கூவிடும் கூட்டம்
மேதினியெங்கும் பாவம் பசித்தவர் ஓட்டம்
உழைப்பவன் பெயரால் சுரண்டிட நாட்டம்
உண்மைத் தொழிலாளி வறுமையால் வாட்டம்

காசினி மாறுது இங்கே ஏய்ப்பவர் கைகளே ஓங்குது
காசு இனி இல்லை என்றால் மானிடம் மங்குது
தொழிலாளிகள் வாழ்க்கை முதலாளிகளிடமே தொங்குது
தொடரட்டும் கூச்சல் ... மேதினம்.... மேதினம்...

-  சக்தி சக்திதாசன்,   லண்டன்.

 

 

m
 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.