........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 290

காதற்கனல்.

 

கண்ணில் விரிந்து நுழைந்து
எண்ணக் கிண்ணம் நிறைந்து
மின்னும் மாய விநோதக் கனல்,
மண்ணையும் பொன்னாக்கும் காதல்.
கண்ணால் இணையைக் காணாவிடில்
மண்ணில் அனைத்தும் பாழென்று
எண்ணும் விசித்திரக் கனல்,
பண்ணும் கோலங்கள் எண்ணற்றவை.

இதயக் கருவறையில் இனிதாய்
பதியமாகும் இணையின் உருவம்
ததிகிடதிமியென நாளும் இள
நதியோட்டமாய் மெல்லத் தவழ்ந்து
தாளமிடும்; ஊக்கச் சக்தியாய்
தாம்பூலமிட்டு ஆக்கம் தரும்.
நீக்கமற்ற மகா சக்தியாய் நெஞ்சில்
பூக்கும் தாமரையாய்த் தினமும்.

பாட்டுப் பாடும் நரம்புகள்
ஆட்டம் ஆடி மின்னொளிரும்.
தேட்டம் நிறையும் வட்டாரத்து
நட்சத்திரக் கோட்டை காதல்.
சிட்டுக் குருவியாய்ச் சிறகடித்து
வட்டமிடும் இன்பப் பாடல்
பூட்டுத் திறப்பின்றி நாளும்
கேட்கும்; காலை முதல் மாலை வரை.

காட்டுக் கூச்சலின்றி ஆன்மா
கூட்டுக் களி பாடும்.
வாட்டும் உலக துன்பங்கள்
கேட்டுக் கேள்வியின்றி விலகும்.
கெட்ட எண்ணங்கள் விலக்கி
பட்டொளி விரிக்கும் காதல்,
நீட்டி உயர்த்தும் நேசஏணி
தொட்டுவிடும் வானக் கோட்டையையும்.!

- வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.
 

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

         முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.