........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 289

நிலைக் கண்ணாடி

 

குளித்து முடித்து
அவிழ்த்த கூந்தலை
அள்ளி முடிந்து
நிலைகொள்ளா அழகை
ஆடைக்குள் மறைத்து
தென்றலாய் மிதந்து
அன்னமாய் நடந்து வந்து
சிலையாய் நின்றவளை
முழுவதுமாய் உள்வாங்கி
பிரதியெடுத்துப் பிரதிபலிக்கிறது
அந்த நிலைக்கண்ணாடி...

அவள் திரும்பி நடந்து
சென்ற பின்னும்
அவளையே பிரதிபலித்தால்
எங்கே தன்னையும்
ரவிவர்மனின் ஓவியம்
என்றெண்ணி
இந்த தொல்லியலாள‌‌ர்கள்
எடுத்துச் சென்றுவிடுவார்களோ
என்றச்சமுறும் நிலைக்கண்ணாடி

அடுத்து வந்த என்னையும்
பிரதியெடுத்து பிரதிபலித்துவிட்டு
அவளை மீண்டும்
தன்னுள் ஏந்திக்கொள்ள
காத்து நிற்கிறது,
அதுபோலவே ஏந்தி
தன்னுள் நிர‌ப்பிக்கொள்ள‌
ஏங்கிக் காத்திருக்கும்
என் நிழ‌ல் போல‌...!

- ராம்ப்ர‌சாத்.

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

         முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.