........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 292

கனவு காணலாம் வாருங்கள்!

 

கவிதை பாடும் காரணமல்ல
கவிஞன் எனும்நோக்கமல்ல
மனிதன் என்னும் மாண்பு மட்டும்
மனதில் கொண்டதால்
கனவு காணலாம் வாருங்கள்!!

கவிதை சொல்லி அழைக்கின்றேன்
நிலவு சுடும் வேளை
நெருப்புக் குளிரும் சோலை
கண்டு மகிழும் உலகம்
கனவில் உண்டு காண்பீர்!

ஆற்ற முடியாத் துயரம்
தீர்க்க முடியா வறுமை
மாற்ற முடியா நோய்
அனைத்தும் அற்ற உலகம்
கனவில் உண்டு பாரீர்!
காண்போம் வாரீர்!!

தேவைகளின் நிமித்தம்
தாவுகின்ற மாந்தர்
தேவையற்ற போதும்
சீண்டுகின்ற கூட்டம்
தேவையில்லை என்றால்
சேர்ந்து செல்வோம் நாம்
கனவு என்னும் உலகம்

பூட்டன் கம்பனோடு
பாட்டன் பாரதியோடு
கூட்டமாய்ச் சேர்ந்து
பாரதிமுதலாய் கண்ண
தாசர்களெல்லாம் கண்ட
கனவுலகைக் காண்போம்!
காற்றிலேறிக் கலப்போம்!!

அழிகின்ற உலகத்தில்
அழியாத வடிவமாய்
செல்வந்தர் ஏழையென்று
பேதமொன்றும் பாராமல்
கண்களை மூடியதும்
காட்சி தரும் கனவுலகம்
சமத்துவத்தின் சாட்சி அது!
சத்தியத்தின் நியதி அது!
கனவுகளில் காண்போம்
ஒரு புனித பூமி!

கனவு காணலாம் வாருங்கள்!!

-சக்தி சக்திதாசன், லண்டன்.
 

 

 

 

 

 

m

 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

         முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.