........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 293

கனவா...! இல்லை...?

 

படுக்கையில், படுக்கையில்
வெடுக்கென்று என்னைத்தள்ளி
எழுந்தது உறக்கம்...

மெல்ல அர்த்தங்களின்
ஒற்றையடிப்பாதை வழியே
வனாந்திரத்தில் நடந்த
அதனுடன் நானும்
துணையாய் நடக்கிறேன்
கார‌ண‌மின்றி...

அவ்வப்போது கடந்து போன‌
எத்தனையோ முகங்களில்
நினைவில் நின்ற
ஒரு முகம், அது
உன் முகம், அதனைத்
தேட யத்தனிக்கும்
நொடிகளில் ஏனோ
பனிமூட்டங்களாய்க்
கரைந்துவிடுகிறது அதுவும்...

எதற்காக நிற்கிறேன்,
ஏன் நிற்கிறேன்,
எங்கு நிற்கிறேன் என்று
எதுவும் நினைவில் இல்லை,
இருந்தபோதிலும் உன்
முகம் மட்டுமே தேங்கி
நிற்கிறது உன் கன்னக்குழிகளில்
குழைந்துபோன என் நெஞ்சுக்குழியில்...

காய்ந்த சருகுகளாய்
சில விளக்கங்கள்
மண்ணிலிருந்து எழும்பி
உன்னையும் என்னையும்
கடந்து கிளைகளை எட்டி
பச்சை இலைகளாவதை
கண்கூடாய்ப் பார்த்து
நிற்கிறோம் நாம் அங்கு...!

-ராம்ப்ரசாத்.
 

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

         முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.