........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 294

மீண்டும் புதிதாய்..!

 

என்னை ஏமாற்றிவிட்டதாய்
நினைத்து நீ
உன்னையே ஏமாற்றிக்கொண்டாய்!

உன் நயவஞ்சகத்தால்
ஏமாந்து போனது
நான் மட்டுமல்ல
உன்மேல் நான்
வைத்திருந்த பாசமும்தான்!

உன் கபடபார்வையால்
கருகிப்போனது
நான் மட்டுமல்ல
நம் காதலும்தான்!!

தூரோகங்கள் என்றும்
நிலைப்பதில்லை.
வலிகள் ஆறும்போது
நான் மீண்டும்
புதிதாய் பிறப்பேன்
உன் போன்ற
வஞ்சகிகளால் காதல்
அழிந்துவிடாமல் இருக்க...

-த.சத்யா, இராஜபாளையம்.

 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

         முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.