........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 304

வெண் தலையணைகள்.

 

ஆகா! அற்புதம்! அழகு!
ஆச்சரியக் கண்காட்சி இது!
அம்சமாய் விரிந்த நீலவானில்
ஆயிரமாயிரம் வெண் தலையணைகள்!
அடுக்கியது யாரோ! எவரோ!
அழகழகாய் அளவெடுத்துச் செய்தாரோ!

அத்தனை தலையணைகளுக்கும் பஞ்சினை
அலுக்காது நிறைத்தவர் யாரோ! எவரோ!
நித்திரையற்ற இவர் பணியால்
நினைக்க மறந்தாரோ விளக்கணைக்க!
நிலையாய் ஒளிருது மூலையில்
நிகரற்ற நித்தியமாம் சூரியஒளி!

தகதகக்கும் தங்கவொளியில், முகில்
தலையணையோரங்கள் மின்னியது சருகையாய்.
தனித்தனியாய் துல்லியமாய் தலையணைகள்
கண்ணில் படுகிறது துலாம்பரமாய்,
வண்ண இயற்கைப் பரிசு இது.
எண்ணிக் கொள்ளலாம் விரும்பினால்.

தன் பட்டுப் பாதங்களால் அந்தத்
தலையணைகளில் துள்ளிக் குதிக்க
துறுதுறுப்புக் குழந்தையும் எண்ணும்.
இந்தக் குளிர் டென்மார்க்கில்
இணைந்த கோடையில் கண்ட
இன்பக் காட்சி என் விழித்திரையில்.

-வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.
 

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.