........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 328

அனுபவம் சொல்வேன்..!

 

கவிதையொன்று பாடவா ?
கதையொன்று கூறவா ?
நெஞ்சினினது ராகத்தை
தமிழ் கொண்டு வார்க்கவா ?

உள்ளத்தின் போராட்டம்
உணர்வுகளின் தேரோட்டம்
இன்பமும் துன்பமும்
தேரோட்டும் சாரதிகள்

ஆசையென்னும் கால்வாயில்
கனவுகளின் நீரோட்டம்
அறிவுசார கனவுகளோ
சிறகில்லாப் பறவைகள்

லட்சியத்தின் பாதையிலே
கால்நடக்கும் வேளையிலே
பலநூறு முட்கள் தைக்கும்
பாவமில்லை தாங்கிக் கொண்டால்

சத்தியத்தின் சோதனையால்
தத்தளிக்கும் நிலை வரலாம்
தனிமரமாய் நின்றிடும் நிலையும் தானாக வந்திடலாம்

இருவிழிகள் ஒரு பார்வை
கொண்டிருந்தால் தோல்வியில்லை
எதுவந்த போதிலும் தாங்கிட்டால் எமைத்தேடி அமைதி வரும்

அனுபவம் கட்டிலிருந்து
அவிழ்ந்து விழும் அத்தியாயம்
அவசியமாய் சொல்ல வந்தேன்
அறிந்திடுவீர் இளநெஞ்சங்களே!

-சக்தி சக்திதாசன், லண்டன். 

 

 

 

 

 

m

 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.