........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 342

சேதமின்றிப் பாதுகாப்போம்...!

 

தோல்விகளின் தொடரான தோரண வரிசைகள்,
சால்வை தரித்து திலகமிடும் ஏமாற்றங்கள்,
மேல்விலாச முத்திரை மாற்றும் இழப்புகள்,
மேல் நிலை மனிதம் மரக்கும் அதிர்வுகள்.

தோல்விகளின் கனம் தாங்கும் உடலில்
தோல் சுரணைத் துலக்கம் குறையும்.
தோழமைப் போர்வை இதமும் மாறும்.
தோள் கொடுக்கும் உணர்வும் ஊறடையும்.

மேடையிட்டு மேவும் பல ஏமாற்றங்கள்
மேலாடையிடுகிறது மேன்மைக் குணங்களிற்கு.
மேன்மாடம் அமைக்கிறது அவநம்பிக்கை உணர்விற்கு.
மேற் பார்வையை அறிவு மயக்குகிறது.

காலூன்றிக் காயமிடும் காட்டமிகு இழப்புகள்
நூலறிவின் ஒளி கலைக்கும் மயக்கங்கள்,
சீலமுடைகுணம் மாற்றும் ஊனங்கள்,
மேல் நிலை மனிதத்தின் இறக்கங்கள்.

வேருக்குள் புகுந்திடும் சிறு பூச்சிகளாய்
யாருக்கு இல்லை அதிர்வான தாக்கங்கள்!
நேருக்கு நேராகும் ஆழ்மன மாற்றங்கள்!
தூருக்குச் சேதமின்றிப் பாதுகாத்திடுங்கள்!

-வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.