........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 343

சந்தோஷம்...!

 

வாழ்க்கையில் நாம்
சந்தோஷத்தை மட்டுமே
எதிர்பார்க்கிறோம்.
பிரச்சினை சின்னதாய்
இருந்தால் கூட
துவண்டு விடுகிறோம்

மூணு வயசுல
மிட்டாய் கிடைத்தால்
சந்தோஷம்...!
ஆறு வயசுல
பாவாடை சட்டையுடன்
பள்ளிக்குப் போனால்
சந்தோஷம்...!
பத்து வயசுல
நண்பர்களுடன்
ஊர் சுற்றினால்
சந்தோஷம்...!
பதினாறு வயசுல
காதல் கைகூடினால்
சந்தோஷம்...!
இருபது வயசுல
படிப்பை முடித்தால்
சந்தோஷம்...!
படித்தவுடனே
வேலை கிடைத்தால்
சந்தோஷம்...!
பின்
திருமணம்
நல்ல கணவணோ
மனைவியோ அமைந்தால்
சந்தோஷம்...!
முதுமையில் நமக்கு
ஆதரவாய் நம் குழந்தைகள்
நம்முடன் இருந்தால்
சந்தோஷம்...!

இப்படி நாம்
வாழ்க்கையில் சந்தோஷத்தை
மட்டுமே பிறந்ததிலிருந்து
அனுபவிக்க நினைக்கிறோம்.
இன்பமும்
துன்பமும் கலந்ததுதான்
வாழ்க்கை.
வாழ்வும்
சாவும் ஒருமுறைதான்
வாழ்க்கை வாழ்வதற்கே?
சந்தோஷத்தை மட்டுமே
நாடும் நம்மனம்
துன்பத்தையும் ஏற்று
வாழத்தானே வேண்டும்.

மனிதனே!
சோகத்தையும் சுகமாய்
ஏற்று வாழந்து பார்
இந்த
வாழ்க்கையின் இரகசியம்
உனக்கு புரியும்.!

-த.சத்யா, இராஜபாளையம்.

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.