........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 344

அன்பே...ஆருயிரே...!

 

பனியில் குளித்து
பூக்களால் உன் கூந்தலை
துவட்டுகிறாயா?
இந்த பூக்கள்
உன் கருமேகக் கூந்தலில்
குளிக்கின்றனவா?

தொலைபேசியில்
மணிக்கணக்கில் கொஞ்சுகிறாய்..
உன் கொஞ்சல் மொழி
இன்னும் கேட்டிட
கெஞ்சுகிறது என் தொலைபேசி...

பனியில் நனைந்த
பூக்களை தொடுகிறாய்..
நீ தொடுகையில் மட்டுமே
நனைவதை விரும்புகின்றன‌
பூக்கள்...

இனிமையாய் பேசுகிறாய்.
நீ பேசுகையில்
சித‌றி விழும் இனிய‌
வார்த்தைகளை அள்ளிக்கொள்ள‌
காத்து நிற்கிறேன்
எறும்பாய் நானும்...

உன் ஒற்றை
சிரிப்பில்,
சிரிப்ப‌த‌ற்குமோர் கார‌ணம்
வேண்டுமாவென‌
உல‌கையே
யோசிக்க‌ வைக்கிறாய்...

-ராம்ப்ரசாத்.

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.