........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 347

தவிக்கும் மனம்!

 

கருந்தேளும்
செந்தேளும்
சேர்ந்து கடித்தாலும்
வலி தெரியாது.

பாயும் புலியும்
படமெடுக்கும் பாம்பும்
பார்வையில் பட்டாலும்
பயம் தெரியாது.

நில விரிவும்
நேர்த்தாக்கும் மின்னலும்
நேர, உணர்வு வந்தாலும்
நிலை கலக்கம் வாராது.

கொடுந்தீயும்
கோரக்காற்றும்
கூடி சூழ்ந்து வந்தாலும்
கொண்டக் கொள்கை மாறாது.

நீர் அகன்றும்
நீல விண் மறைந்தும்
நில வாழ்வை மறுத்தாலும்
நிலைத்த நம்பிக்கைக் குறையாது.

மங்கும் மனித தனம்
மதி இழந்த தமிழினம்
எங்கு சென்று முடியுமோ?
எண்ணி மனம் தவிக்கிறதே.

-பொன்பரப்பியான்.
 

 

 

 

 

 

m

 

பொன்பரப்பியான் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.