........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 348

தன்னம்பிக்கை!

 

தெருவில் கொட்டிய
குப்பை அந்த
சிறுவனின் மீது
சிறுதும் கோபப்படாமல்
நடந்து சென்றான்...
கிழிந்த சட்டை
பசியால் வாடிய
முகம் என
அவன் ஒரு
பிச்சைக்காரனைப் போல தெரிந்தான்
கண்ணீர் வர
அவனை பார்த்துக் கொண்டே
பின் தொடர்ந்தேன்...
என்னிடமுள்ள
பத்துரூபாயை வைத்துக்கொள்
என்று கொடுத்தேன்
சட்டென திரும்பிப்
பார்த்த அவன்
பார்வை என்னை
நெருப்பாய் சுட்டெரித்தது...
மன்னித்து விடுங்கள்
கடவுள் கொடுத்த
இக்கரங்கள்
உழைக்க மட்டுமே...
வறுமை என்னை
உங்களிடத்தில்
பிச்சைக்காரனைப்போல தெரியவைத்தது
ஆனால்
தன்னம்பிக்கை எனும் ஆயுதம்
எனக்குள் இருக்கும் வரை
நான் பணக்காரன் தான்
பிச்சைக்காரனல்ல...
என்ற அவனின்
வார்த்தைகள்
எனக்குள் தன்னம்பிக்கையை
கொடுத்தது...

-த.சத்யா, இராஜபாளையம்.
 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.