........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 358

நான் உன்னிடம் தான்!

இன்பம்
உன்னிடம் பேசும்
அந்த நாள்...!

துன்பம்
உன்னிடம் பேசாத
அந்த நாள்...!

சந்தோஷம்
உன்னை பார்க்கும்
அந்த நாள்...!

சோகம்
உன்னை பார்க்காத
அந்த நாள்...!

பயம்
என்னை வெறுத்திடுவாயோ
என்று நினைக்கும்
அக்கணம்...!

ஆர்வம்
நீ பேசப்போகும்
வார்த்தையை கேட்கும்
அக்கணம்...!

ஈர்ப்பு
உன் கண்கள்
என் கண்களோடு
பேசிய தினம்...!

அச்சம்
எங்கே என்னை
மறந்துவிடுவாயோ என்ற
என் எண்ணம்...!

ஆசை
உன்னை அணைக்கும்
அந்நேரம்...!

மரணம்
இவை எதுவுமே
இல்லையென்றால்...!
வாழ்வு முடிவுதான்...!!

--த.சத்யா, இராஐபாளையம்.
 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.