........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 357

பருந்து வாழ்க்கை!

இட்ட முட்டைகளை
மரப்பொந்தில்விட்டு
இரை தேடி
உயரப் பறக்குமாம் பருந்து...!

இத்தனை உயரம்
பறப்பவன் தானொருவனே
என் இறுமாந்து
கொள்ளுமாம் தன்னை மறந்து...!

அப்போது,
மரப்பொந்து முட்டைகளைப்
பாம்பொன்று வந்து
கவ்வி செல்லுமாம் அதுவே,
அதன் பசிப்பிணிக்கு மருந்து...!

அப்படித்தான் கவ்வப்பட்டு
காணாமல் போகிறது
பணம் சமைப்போரின்
சொந்த வாழ்க்கையும்...!

-ராம்ப்ரசாத்.
 

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.