........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 365

கனவுகளில் வாழ்ந்திட...!

கண்களை மூடிக் கொஞ்சம்
கனவு காணத் துடிக்கின்றேன்
வெஞ்சமர்த் துயர்கள் நீங்கி
வாழ்ந்திட ஏங்குகிறேன்

நின்துயர் அறியாத மனிதர் பாப்பா
நித்தம் மாயையில் வாழ்கிறார்
சுற்றம் சூழல் பாராமல் இவர்
சுயநலத்தில் நன்றாகத் திளைக்கின்றார்

எத்திசை நோக்கித் திரும்பினாலும்
வெறும்தரை தான் உன் முன்னால்
முட்புதர் கூட அந்நிலத்தில்
முளைவிட ஒருதுளி நீர் இல்லை

பச்சைப்பசேல் என தளிர்த்திருக்கும்
பசியறியா உலகத்தில் இருந்து கொண்டு
உன் துயர் தீர்க்கும் வழி செல்லாமல்
உன்மத்தர் வீண் தர்க்கம் புரிகின்றார்

ஊன்றிடத் திரணியற்ற பிஞ்சுக்கால்கள்
உணர்ச்சிகள் தேக்கி வாடும் உன்விழிகள்
அனைத்துமே வர்ணத் தொலைக்காட்சியில்
அழகாய் காண்கிறார் புசித்துக்கொண்டே

புரியவில்லை பாப்பா எனக்கும் உலகில்
புதைந்து விட்ட மானிடத்தின் மறைவிடமும்
கண்களை மூடிக் காட்சிகளை மறைத்து
கனவுகளில் வாழ்ந்திடப் பார்க்கிறேன்!

-சக்தி சக்திதாசன்.
 

 

 

 

 

 

m

 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.